கோவையை சேர்ந்த பள்ளி மாணவி, சம்யுக்தா பரதநாட்டியத்தில் உள்ள 54 முத்திரைகளையும் முப் பது விநாடிகளில் அபிநயம் செய்தபடி சொல்லி உலக சாதனை படைத்துள்ளார்.
கோவை கணபதியை சேர்ந்தவர் சம்யுக்தா. பத்தாம் வகுப்பு மாண வியான இவர், சிறு வயது முதலே சாய் கலாஷேத்ரா நாட்டிய பள்ளியில் பரதநாட்டியம் கற்று வருகிறார்.
இந்நிலையில் பரதநாட்டியம் கற்பதற்கு முக்கிய கலையான 54 முத்திரைகளை முப்பது விநாடிகளில் இவர் அபிநயம் செய்தபடி சொல்லி நோபிள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது குரு சீதாலட்சுமி மற்றும் பெற்றோர்கள் ரமேஷ் பாபு, சந்திரபிரபா ஆகியோர் முன்னிலை யில் 54 முத்திரை களை அபிநயம் செய்து சாதனை படைத்தார்.
பத்தாக்கம், மயூரம், கத் திரி முகம் போன்ற ஒரு கைகளால் செய்யும் 28 முத்திரைகளையும், அஞ்சலி, கற்கடகம், தபோத்தம் போன்ற இரு கைகளால் செய்யும் 26 முத்திரைகள் என 54 முத்திரைகளையும் குறைந்த நேரத்தில் செய்த இவரது சாதனையை பாராட்டி நோபிள் புக் ஆப் ரெக்கார்டு புத்த கத்தின் பதிப்பாளர் தியாகு மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
ஏற்கனவே ஒரு நிமிடத்தில் செய்த இந்த சாதனையை மாணவி சம்யுக்தா முப்பது விநாடிகளில் செய்து முறி யடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.