தூத்துக்குடி & நாசரேத் டயோசீசன் எஸ்டிகே ராஜன் அணியில் இருந்த முன்னாள் எம்பி ஏடிஜே ஜெயசீலன் டிஎஸ்எப் அணியில் இணைந்தார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் டிஎஸ்எப் துரைராஜ் தலைமையில் ஒரு அணியும் எஸ்டிகே ராஜன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது.
இதில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் டி.எஸ்.எப். துரைராஜ் அணி அமோகமாக வெற்றி பெற்று இணைச் செயலாளராக துரை ராஜ் மகன் கிப்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவரது தலைமையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் எஸ்டிகே ராஜன் அணியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்பி ஏடிஜே ஜெயசீலன், அவரது துணைவியார் கமலி ஜெயசீலன் ஆகியோர் டிஎஸ்எப் துரை ராஜ் அணியான லே செயலாளர் கிப்சனுக்கு சால்வை அணிவித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறும்போது “நான் திமுக கட்சியில் இருந்தாலும். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறேன். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.
தற்போது லே செயலாளர் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிர்வாகத்தை மேலும் மேம்படுத்த இணைந்து செயல்படுவோம், என்று கூறினார்.
இந்நிகழ்ச் சியில் உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருள £ளர் மோகன்ராஜ் அருமைநாயகம் உட்பட பலர் உடனிருந்தனர்.