fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் நடை பந்தயம்

தூத்துக்குடியில் நடை பந்தயம்

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வருகிற செவ்வாய்க்கிழமை மாணிக்க மஹாலில் ரூபி ஜூப்லி விமர்சையாக நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வ.உ.சி கல்லூரி எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் பூங்காவில் இருந்து, பழைய துறைமுகம் வரை நடைப்பந்தயம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை இந்திய வர்த்தக தொழில் சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், நிர்வாக செயலாளர் சங்கர் மாரிமுத்து, துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் மெரின்டே வி.ராயர், ரமேஷ் சுப்புராஜ், பால் விநாயகம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img