தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் பணி நிறைவுபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சேலத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் சி.கணேசன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு காலத்தினை பணி காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும், விசாரணையில் சேர்க்காத அரசு அலுவலர்களை வழக்கில் சேர்ப்பதை தடுத்திட வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனம், பதவி உயர்வு பட்டியலை உடனடியாக கோருவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பணி நிறைவுபெற்ற மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து பொதுக்குழு கூடி புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய மாநில தலைவராக இரா. பிரேமா, மாநில பொதுச் செயலாளராக சி. செல்வகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கே. ஆர்.ராஜேந்திரன் சேலம் TNGOU, எம். ராஜா மாநில பொருளாளர், என். தண்டபாணி மாநில TNGOU, அமிர்தகுமார், சக்ரவர்த்தி, கங்காராம், மோகன்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.