கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலி யர்களின் கால்களில் விழுந்து கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த ப்ளோரன்ஸ் நைட்டிங் கேலின் பிறந்த நாளான மே 12 தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் கொரோனா பெருந்தொற்றுக்கு இடை யே நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்ப ணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் நரேந் திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத் துவமனையான இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது.
அப்போது நவீன தாதியலின் நிறுவனரான ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப் படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உள் ளிட்ட மருத்துவர்கள் மற் றும் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரிய வர்கள் என புகழாரம் சூட் டினார்.
தொடர்ந்து உணர்ச் சிவசப்பட்டமருத் துவமனை முதல்வர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவி லியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள்தான் தற் போதைய சூழலில் கடவுள் என கூறி அழுது கண்ணீர் விட்டார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.