கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
உடன் துணை இயக்குநர் (சுகாதாரம்) அருணா, நகர்நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.