fbpx
Homeபிற செய்திகள்கோவை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலயம் ரூ.8.85கோடி செலவில் 5 மாடி கொண்ட பிரார்த்தனை மண்டபம்! பிஷப்...

கோவை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலயம் ரூ.8.85கோடி செலவில் 5 மாடி கொண்ட பிரார்த்தனை மண்டபம்! பிஷப் திமோத்தி ரவீந்தர் திறந்துவைத்தார்

கோவை திருச்சி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் ரூ.8.85 கோடி செலவில் 5 மாடி கொண்ட பிரமாண்டமான பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை கோவை சிஎஸ்ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு ஆலய தலைமை போதகர் ஜான் குணசீலன் தலைமை வகித்தார்.

செயலாளர் ஜேபி ஜேக்கப் வரவேற்றார். கட்டிட குழு கன்வீனர் எம்.என்.சுதன் அப்பாதுரை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பரமானந்தம், ஆயர்கள் சார்லஸ், டேவிட் பர்னபாஸ், ஆஸ்டின், பிரவீன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த கட்டிடத்தை ஏ.வி.பிராப்பர்டிஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அதன் உரிமையாளர் பொறியாளர் வின்செட் ராஜ், அவரது மகன் பொறியாளர் லியோ ஆகியோர் தலைமையில் கட்டியுள்ளனர்.

இந்த கட்டிடத்தின் மொத்தப்பரப்பளவு 49,370 சதுரடி
முதலாம் தளம்: அடிதளம் 9726 சதுரடி பரப்பளவு கொண்டது இங்கு 2 சக்கர வாகனங்கள் 100 நிறுத்தலாம் நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் தளம்: 9726 சதுரடி கொண்டது இங்கு 50 கார்கள் வரை நிறுத்தலாம். இங்கும் நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மூன்றாம் தளம்: வரவேற்பு மண்டபம் 9726 சதுரடி பரப்பளவு 1500 பேர் வரை அமரலாம். இங்கு வரவேற்பு வைபோகம், பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடத்தலாம். முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

விசாலமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. பெண்& மாப்பிள்ளை தங்க இரு அறைகள் உள்ளது. உடை மாற்ற அறை உள்ளது.

நான்காம் தளம்: இங்கு 700 பேர் அமரக்கூடிய மினி மண்டபம் உள்ளது. நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது தளம்: இங்கு ஞாயிறு பாட சாலை, பைபிள் வகுப்பு நடத்தலாம். சேர்மன், செயலாளர், பொருளாளர் அறைகள், டார்மிட்ரி, மினி ஹால் மற்றும் அறைகள் உள்ளன.

2 லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தை சிஎஸ்ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தை மிக திறமையாகவும் குறுகிய காலத்தில் தரமான முறையில் கட்டி தந்துள்ள பொறியாளர் வின்சென்ட் ராஜ், பொறியாளர் லியோ அவர்களை பிஷப் பாராட்டி பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img