fbpx
Homeபிற செய்திகள்கோல்ஃபெர்ஸ் கிளாசிக் டிராபி 112 வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கோல்ஃபெர்ஸ் கிளாசிக் டிராபி 112 வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கோல்ஃப் விளை யாட்டை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தென்னிந் தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்டு, கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப்ன் ஒத்துழைப்போடு வருடாந்திர கோல்ஃப் போட்டித்தொடரின் 9-வது பதிப்பை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.

காசாகிராண்டு கோல்ஃபர்ஸ் கிளாசிக் ட்ராபி என்ற கௌர வமிக்க விருதையும், பரி சுக்கோப்பையையும் வெல்வதற்காக கோயம் புத்தூர் கோல்ஃப் கிளப் பில் நடைபெற்ற இம் மாபெரும் போட்டியில் நாடெங்கிலுமிருந்து 112 வீரர்கள் வெகு ஆர் வத்தோடு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாகிராண்டு நிறுவ னத்தின் கோயம்புத்தூர் மண்டலத்திற்கான இயக்கு னர் செந்தில் குமார் கூறியதாவது: கோல்ஃப் விளையாட்டு மீதான விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த விளையாட்டில் ஈடுபடுமாறு செய்ய ஊக்குவிக்கவும், கோல்ஃபை பிரபலப்படுத்தும் நோக் கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளையும், போட்டிகளையும் கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப், அது தொடங்கப்பட்ட நாளிலிருந்தே சிறப்பாக நடத்தி வருகிறது.

டபுள்ஸ் மெடல் சுற்று, பெஸ்ட் பால் ஃபார்மேட் என இருநாட்கள் நிகழ் வாக நடைபெற்ற இப்போட் டியில் 112 கோல்ஃப் வீரர்கள் பங்கேற்றனர்.

ஆர்வத்தோடும், ஆரோக்கியமான போட்டி உணர்வோடும் நடைபெற்ற இந்த கோல்ஃப் போட்டியில் ழிமீtt 0-24 வகையினத்தில் வெற்றியாளர்களாக என். லீலாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர் (62) முதலிடம் பிடித்தனர்.

ஸ்ரீ ரித்தி லட்சுமி, டாக்டர் பீயூஷ் மனியம்பத் (66) ஆகியோர் இரண்டாவது இடத்தைப் பெற்றனர்.

நிக்ஷீஷீss வகையினத்தின் கீழ் எஸ். பரத்ராம்,ஜே. விக் னேஷா (69) ஆகியோர் முதலிடத்தையும், வி.ஆர். நரேன்குமார், ஜே.ஜே. சக்கோலா (74) ஆகியோர் ரன்னர்ஸ் – அப் ஆகவும் வெற்றிவாகை சூடினர்.

இவை மட்டுமன்றி, இன்னும் பல வகையினங் களின் கீழ் கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து, காசாகிராண்டு இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோல்ஃப் வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கி கௌரவித்தது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img