fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்: குறிச்சியில் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்: குறிச்சியில் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

கொரோனா நிவாரணமாக தமிழகத்தில், அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதில் முதல் தவணையான 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவை குறிச்சி 100 வது வட்ட பகுதியில் கடைகளில் கூட்டம் சேர கூடாது என்பதற்காக தினமும் 200 கார்டுதாரர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்படுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது.

சீனிவாசநகர், கணேசபுரம், மேட்டூர் போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது.

ரேஷன் கடைகளுக்கு , எந்த தேதி , நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை,அந்த பகுதி 100 வட்ட கழக பொறுப்பாளர் பொன்.சுரேஷ்பாபு, கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணியில் , ரேஷன் ஊழியர்களுடன் இணைந்து பணியில் ஈடுபட்டார்.

இதில் குறிச்சி 100 வது வட்டம், ஆதவன் ஆறுமுகம், கணேஷ் பிரபு, அரிசிக்கடை ஆனந்த், ராஜ்குமார், கோவிந்தராஜ், ரங்கநாதபுரம் ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img