fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.1.05 கோடி நிவாரண நிதியை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கினர்.


கொரோனா பொது நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்பினர், தனி நபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தனது பங்களிப்பாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.05 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அருண் பழனிசாமி, கே.எம்.சி.ஹெச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நிவாரண நிதியை வழங்கினர். கடந்த ஆண்டும் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுதவிர கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கோவை மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img