ஏரியல் நிறுவனம் சலவை செய்வதில் பல கண்டுபிடிப்புகளை அறிமு கப்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஆண் பெண், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. பி&ஜி பிராண்டில் தயா ரிக்கப்படும் ஏரியல் மூன்றாம் பாலின சமூகத் தின் பிரச்சனையை நிலை நிறுத்தி, மிகவும் ஊக்கு விக்கும் வகையில் ஒரு படம் எடுத்துள்ளது.
கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் பிரியா. ஆணாக பிறந்தவர், ஹார்மோன் மாற்றங்களால் திருநங்கையாகமாறினார். கடந்த 30 வருடங்களாக அவர் வாழ்க்கையில் சந் தித்த கஷ்டங்கள் ஏராளம். குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், சமூகம் என அனைவருமே பிரியாவுக்கு எதிராக இருந்தனர்.
அசிங்கப்படுத்தினர். கேலி செய்தனர். ஒரு நாள் குடும்பத்தினரிடம் பேசி அவர்களுக்கு தன் நிலைமையை புரிய வைத்தார். தவறான வழியில் போக மாட்டேன் என உறுதி அளித்தார். பெற்றவர்கள் புரிந்துக் கொண்டு பிரியாவை ஏற் றுக்கொண்டனர். அதன் பின்னரே சமூகம் வாய் மூடியது.
நன்கு படித்தார். நல்ல மார்க் எடுத்தார். கடின மாக உழைத்து மருத்துவர் ஆனார். நோயாளிகளை அன்போடு சிகிச்சை கொடுத்து அனுப்புகிறார். பிரியாவின் இத்தனை இன்னல்களை தொகுத்து அவர் முன்னேறிய கதையை தான் ஏரியல் நிறுவனம் படமாக எடுத்துள்ளது. #விணீளீமீமிtறிஷீssவீதீறீமீ என்ற பிரச்சாரத்தை துவக்கியது ஏரியல். “முடியாததை செய்து காட்டுவது” தான் அதன் அர்த்தம்.
பிரியா பற்றிய படம் பலருக்கு ஊக்கம் அளித் துள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் பலரின் பாராட்டுகளை பெற் றுள்ளது. ”திருநங்கைகள் என்றால் உடனே ஆண்கள் முன் அவர்கள் நடனம் ஆடுவார்கள், தவறான வழியில் போவார்கள் என சமூகம் நினைக்கிறது. ஆனால் என்னை போல் பலர் சாதித்து உள்ளனர்.
மாற்றங்கள் சமூகத்தில் இருந்து வரவேண்டியது இல்லை. முதலில் குடும்பத்தில் இருந்து வர வேண்டியது. குடும்பத்தினர் திருநங்கைகளை ஏற்றுக்கொண்டாலே இங்கு பலர் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டு நான் “ என பிரியா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து போரா டும் வலிமை இருந்தால் அனை வரும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தவே திருநங்கை பிரியாவின் வாழ்க் கையை படமாக எடுத்து வெளியிட்டதாக ஏரியல் மார்க்கெட்டிங் மேனேஜர் சரத்வர்மா பெரு மையுடன் தெரிவித்தார்.