fbpx
Homeபிற செய்திகள்உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறை- அவினாசிலிங்கம் கல்லூரியில் கருத்தரங்கு

உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறை- அவினாசிலிங்கம் கல்லூரியில் கருத்தரங்கு

வடகோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில், தேசிய மதிப்பீட்டு அளவு கோல்களை வளர்க்கும் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்து, தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

சிறப்பு விருந்தினருக்கு என்சிசி மாணவர்கள், வரவேற்பு அளித்தனர்.
சிறப்பு விருந்தினர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென்படேல், குத்துவிளக்கேற்றி வைத்து இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். கல்லூரி வேந்தர் தியாகராஜன் தலைமை தாங்கி பேசினார்.

உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில், உயர் கல்வியில் நிறுவனத்தின் சிறப்பம்சம் என்பது நிறுவன செயல்திறனின், வெவ்வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் தொகுப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.

தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பு, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் இதனை தரப்படுத்தும், அணுகு முறை குறித்த பரிந்துரைகள் எடுத்துரைக்கப்பட்டன.

சிறந்த நடைமுறைகள் தரப்படுத்துதல் மட்டுமே ஒட்டுமொத்த நோக்கமாக கொண்டு செயல்படும் நிலையில், நீடித்த முன்னேற்ற முயற்சிகளை அடிப்படையாக கொண்டு வெற்றிக்கு வழிவகுக்கும் புரிதலை வளர்க்க இது போன்ற கருத்தரங்கு உதவுகிறது.

வெற்றிக்கு வழிவகுக்கும் அடிப்படைகள் பற்றிய புரிதலின் வளர்ச்சி மிகவும் பொருத்தமான முக்கிய செயல்திறன்களை குறிப்பிடுவதன் மூலமாக, நிறுவனங்களின், தற்போதைய நடைமுறைகளுக்கும் உயர்ந்த நிறுவனங்களுக்கும் இடை யிலான இடைவெளியை குறைத்து வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள இது போன்ற கருத்தரங்குகள் மாணவிகளின் கல்விமுறையை மேம்படுத்த உதவுகின்றன.

பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img