இணையதளத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை தன் விருப்பத்தின்பேரில் இணைக்கும் மாவட்டத்தின் முதல் 1000 வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி வழங்கும் மின் சான்றுகள் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர் தல் ஆணையம், வாக்காளர் பட்டியலினை 100% தூய்மையாக்கல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்களை ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம் பெறுவதை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை தன் விருப்பத்தின் பேரில் பெற்று, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் திட்டம் 01.08.2022 அன்று முதல் தொடங்கி உள்ளது.
15.08.2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் வாக்காளர்கள் தீவிரமாக ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 வாக்காளர் களுக்கும் மின் சான்றிதழ் வழங் கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மின் சான்றிதழ் போட்டிக் கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
லீttஜீs://மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/ரீமீtணீநீமீக்ஷீtவீயீவீநீணீtமீ இப்போட்டியில், கோவை மாவட்டத்திலுள்ள தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளை ஊக்கு வித்து அவர்களை மின் சான்றிதழ் பெற வைக்க அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தனியார் நிறுவனங்களில் பணி புரியம் ஊழியர்கள், அரசு கழகங்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், தொழில்முனைவோர், இதர அனைத்து தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் மற்றும் ஆர்வமுள்ள வாக்காளர் அனைவரும் தவறாது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து மின் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.