ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் யோகா தின சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்தோடு யோகாசன மற்றும் தியான பயிற்சி மேற்கொண்டனர்.
இவர்களுக்கு. உடல் மனம் சார்ந்த யோகாசனம்,தியானம் மற்றும் பிராணயாம பயிற்சி மற்றும் உடல் பயிற்சி அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
பயிற்சியாளர்கள் மணிகண்டன் (ஜெயம் அகாடமி) மற்றும் உடற்கல்வி இயக்குனரும், ஸ்வஸ்திஹ அச்சீவர்ஸ் அகாடமியின் பயிற்சியாளருமான தேவகாந்தன் இத்தகவலை தெரிவித்தனர்.