fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

சேலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் 10 ,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி பள்ளிக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் விலை இல்லா இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சேலம் வேம்படிதாளம் அரசு உயர்நிலைப் பள் ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடை பெற்றது. வீரபாண்டி வட்டார ஆத்மா குழு தலைவர் வெண்ணிலா சேகர் தலைமை தாங்கினார்.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட சைக்கிள்களை வழங்கி பேசினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமூர்த்தி, கௌரவ தலைவர் சண் முகம், அவை தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் சேகர், சமூக சேவகர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img