fbpx
Homeபிற செய்திகள்அண்ணா பிறந்தநாள் விழா: வி.பி.கந்தசாமி எம்எல்ஏ மரியாதை

அண்ணா பிறந்தநாள் விழா: வி.பி.கந்தசாமி எம்எல்ஏ மரியாதை

சூலூர் ஒன்றியத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குமரவேல், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கந்தவேல், நகரச் செயலாளர்கள் கார்த்திகை வேலன், சிவக்குமார், சூலூர் கூட்டுறவு வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.பி. அங்கண்ணன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பிரபு ராம், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரபு, மீன வரணி ஆறுமுகம், கவுன்சிலர் செல்வராஜ், கலங்கல் முன்னாள் தலைவர் நடராஜன், பட்டணம் கம்பர் தேவ ராஜ், சூலூர் கார்த்தி, ராஜன், மோகன், அருண், கரிகாலன், இளங்கோவன், சேகர், மகளிர் அணி மணிமாலா மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத், சபரீசன், தங்கராஜ், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img